Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

காயல்பட்டினத்தில் வீட்டில் சிசிடிவி காமிரா திருட்டு

ஆறுமுகநேரி, ஆக. 3: காயல்பட்டினம் விநாயகர் கோயில் தெருவை சேர்ந்த வெங்கடேஷ் மனைவி சத்யா (37). கடந்த ஜூலை 31ம் தேதி நள்ளிரவு 12.15 மணியளவில் வெளியே வந்துள்ளார். அப்போது மர்ம நபர்கள் 4 பேர் சத்யா வீட்டின் முன் வைக்கப்பட்ட ரூ.35 ஆயிரம் மதிப்பிலான 2 கேமராக்களை திருடி சென்றுள்ளனர். இது குறித்து சத்யா ஆறுமுகநேரி போலீசில் புகார் அளித்தார். எஸ்எஸ்ஐ கோயில்பிள்ளை வழக்கு பதிவு செய்தார்.

இன்ஸ்பெக்டர் ரென்னிஸ் விசாரணை நடத்தி திருட்டில் ஈடுபட்ட ஆறுமுகநேரி காணியாளர் தெருவை சேர்ந்த சண்முகவேல் மகன் முனிஸ்ராஜ் (29), பாரதிநகரை சேர்ந்த அந்தோணி ராஜ் (32) ஆகிய இருவரையும் கைது செய்து திருச்செந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வை. கிளை சிறையில் அடைத்தார். இவர்களிடம் இருந்து 2 சிசிடிவி காமிராக்களை பறிமுதல் செய்தனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.