Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

பூரண மதுவிலக்கே முஸ்லிம் லீக் கொள்கை

தூத்துக்குடி, ஆக. 3: தமிழகத்தில் பூரண மதுவிலக்கே இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் கொள்கை என்று தூத்துக்குடியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அபுபக்கர் தெரிவித்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், தூத்துக்குடியில் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட தலைவர் மீராசா தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் முகமது அபுபக்கர், பொருளாளர் ஷாஜகான், செயலாளர் காயல் மகபூப் உள்ளிட்டோர் பேசினர்.

மாவட்ட பொருளாளர் மீராஷா, நெல்லை வழக்கறிஞர் முகமது உசேன், மாவட்ட வர்த்தக அணி சுலைமான், மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் சுலைமான், சாகுல் ஹமீது, முகமது உவைஸ், அரபி, இம்ரான், அன்சாரி, மெகராஜ், மாமன்ற உறுப்பினர் மும்தாஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் மாநில பொதுச் செயலாளர் முகமது அபுபக்கர், நிருபர்களிடம் கூறுகையில்: நாடாளுமன்றத்தில் வந்தே மாதரம் பாடலை கட்டாயமாக்கும் முயற்சிக்கு எதிராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். தவெக அரசு லஞ்சம், ஊழலை ஒழிப்பதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மாநில நிதிநிலை அறிக்கையில் சிறுபான்மையினர் நலத்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். காயல்பட்டினம் நகராட்சியில் மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகளை மறுவரையறை செய்ய வேண்டும். பூரண மதுவிலக்கே இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் கொள்கை. சிறுபான்மையினருக்கு எதிராக செயல்படுவதில் எப்போதும் முதலிடத்தில் இருப்பது பாஜ அரசுதான். மேகதாது அணை விவகாரத்தில் தமிழக முதல்வர் அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டி அனைவரின் ஒப்புதலுடன் நடவடிக்கை எடுத்தால் சிறப்பாக இருக்கும் என்பதுதான் எங்களது கருத்து.

தவெக கூட்டணியில் நாங்கள் இணைந்ததை கட்சி நிர்வாகிகள், முஸ்லிம் சமுதாயத்தினர் அனைவரும் ஏற்று உள்ளனர். இதுவரை மதச்சார்பற்ற நிலையில் தமிழக வெற்றிக் கழகம் அரசு செயல்பட்டு வருகிறது. திமுக ஆட்சியில் கடைபிடிக்கப்பட்டது போன்று தற்போதும் செயல்பட்டு வருகிறார்கள்’ என்றார். 1008 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை திருச்செந்தூர், ஆக. 3: திருச்செந்தூரில் நடந்த இந்து மகா சபா ஆலோசனைக் கூட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு 1008 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட இந்து மகா சபா சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான ஆலோசனை கூட்டம், திருச்செந்தூர் நகராட்சி அலுவலகம் எதிரில் நடந்தது.

மாநில தலைவர் சுந்தரவேல் தலைமை வகித்தார். மாநில செயலாளர் சேர்மத்துரை முன்னிலை வகித்தார். மாநில துணை தலைவர் அண்ணாசாமி வரவேற்றார். அமைப்பு பொதுச்செயலாளர் ராம்குமார் சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் இந்து மகா சபா சார்பில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, வரும் செப்டம்பர் 14ம் தேதி 1008 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வது, செப்டம்பர் 16 அன்று திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையில் விசர்ஜனம் செய்வது, பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவதற்கு விதிமுறைகளை எளிதாக்கி, தமிழ்நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழாவைச் சிறப்பாக கொண்டாட வழிவகை செய்ய வேண்டும் என முதல்வரை வலியுறுத்துவது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் இந்து மகா சபா நிர்வாகிகள் சக்திகுமார், ஆண்டவர் சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பாளர் ராமசாமி நன்றி கூறினார்.