Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

முத்துப்பேட்டை அருகே பள்ளி மாணவர் மாயம்

முத்துப்பேட்டை, ஜூலை 18: முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் 10-ம் வகுப்பு மாணவன் மாயமானதாக தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் மேலக்காடு கிராமத்தை சேர்ந்தவர் உதயகுமார்(40). இவரது மகன் லத்தீஸ்வரன்(15) இவர் தில்லைவிளாகம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை வீட்டிலிருந்து சென்றவர் வீடு திரும்ப வில்லை. இதனால் அதர்ச்சி அடைந்த மாணவனின் பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் தந்தை உதயக்குமார் புகார் செய்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் செந்தூர் பாண்டியன் மற்றும் போலீசார் மாயமான மாணவனை தேடி வருகின்றனர்.