Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வட்டார நாற்றங்காலில் 20 ஆயிரம் மரக்கன்றுகள்

திருவாரூர், ஜூன் 19: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் மகிழஞ்சேரி ஊராட்சியில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் சார்பில் கூடுதல் வட்டார நாற்றங்கால் அமைக்கப்பட்டுள்ளதை திருவாரூர் மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இதில் மகிழஞ்சேரி ஊராட்சியில் ரூ.8.90 லட்சம் மதிப்பீட்டில், புங்கண், நாவல், நீர்மருது, நெல்லி, தேக்கு, வேம்பு, மகாகனி, இலுப்பை, வேம்பாலை, மாகன்று, அயன், மந்தாரை, வாதாம், வேங்கை, செம்மரம், இலைபுரசு என மொத்தம் 20,000 மரக்கன்றுகள் வட்டார நாற்றங்காலில் வளர்க்கப்பட்டு வருவதை மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் பின்னர் மரக்கன்றுகளை நன்றாக பராமரித்திடவும், தேவையான பகுதிகளில் நடவு செய்ய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வில் ஒன்றிய பொறியாளர்கள் ரமேஷ்குமார், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் முருகையன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.