Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

திருத்துறைப்பூண்டி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

திருத்துறைப்பூண்டி, ஜூலை 17: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு ஒன்றிய நெடும்பலம் ஊராட்சி மங்களநாயகிபுரம் கிளையின் சார்பில் 15 நாட்களுக்கு ஒரு முறை வரும் தண்ணீர் தட்டுப்பாட்டை தடையின்றி வழங்கிட வலியுறுத்தி காலை 11 மணி நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் மாநில குழு உறுப்பினர் நாகராஜன் தலைமை வகித்தார். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜோதிபாசு,

ஒன்றிய செயலாளர் காரல் மார்க்ஸ், நகர செயலாளர் கோபு, முத்துப்பேட்டை ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி ஒன்றிய குழு உறுப்பினர் காளிமுத்து, மாவட்ட குழு உறுப்பினர் பிரகாஷ், நகர குழு உறுப்பினர் தண்டபாணி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் முத்து செல்வன், வீரசேகரன், வேணுகோபால் கிளைச் செயலாளர்கள் தன்சினாத் , செல்வராஜ், வீரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்து போராட்ட இடத்திற்கு வந்து தாசில்தார் செந்தில்குமார் ஒன்றிய ஆணையர் கண்ணகி, இன்ஸ்பெக்டர் மஞ்சுளா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் சாலை மறியல் ஈடுப்பட்ட வரிகளிடம் பேச்சுவார்த்தையில் தினமும் இரண்டு டேங்கர் லாரிகளில் தண்ணீர் கொடுப்பதாகவும், அடி பைப் போடும் இடங்களில் உடனடியாக அமைத்து தருவதாகவும், குடிநீர் வாரியத்தின் மூலம் 50,000 லிட்டரில் இருந்து ஒரு லட்சம் லிட்டராக உயர்த்தி தருவதாக உத்தரவாதம் கொடுத்தின் அடிப்படையில் போராட்டம் 12மணியளவில் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த சாலை மறியலினால் திருத்துறைப்பூண்டி -பட்டுக்கோட்டை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.