திருவாரூர், நீடாமங்கலத்தில் கனமழை
Advertisement
திருவாரூர்,டிச.3: திருவாரூர் மற்றும் நீடாமங்கலத்தில் நேற்று மாலை பெய்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் வங்க கடலில் ஏற்பட்ட டிட்வா புயல் சின்னம் காரணமாக திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கனமழை முதல் மிககன மழை வரையில் பெய்தது. அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் மாவட்ட தலைநகரான திருவாரூர் உட்பட மாவட்டம் முழுவதும் கடந்த 28 மற்றும் 29 தேதிகளில் இடைவிடாது தொடர்ந்து மிதமான மழையாக பெய்தது.
Advertisement