Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மனநலம் பாதித்த இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் 4 வாலிபர்கள் கைது: மேலும் சிலருக்கு வலை வந்தவாசியில் உணவு வாங்கி கொடுத்து கொடூரம்

வந்தவாசி, ஜன. 9: மனநலம் பாதித்த இளம்பெண்ணுக்கு உணவு வாங்கி கொடுத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததில் 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதியை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த சில நாட்களாக இவரது உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டது. இதனால் இவரது தாய், செய்யாறு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். அங்கு மருத்துவர்கள் நடத்திய பரிசோதனையில் இளம்பெண் 5 மாதம் கர்ப்பிணியாக இருப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் மகளிடம் விசாரித்தார். ஆனால் உரிய பதில் தர முடியாமல் இளம்பெண் தவித்தார். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் திருவண்ணாமலை மாவட்ட சமூக நலத்துறைக்கும், வந்தவாசி மகளிர் காவல்நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் மாவட்ட சமூகநலத்துறை அலுவலரும், மனநல காப்பக மருத்துவரும் இளம்பெண்ணிடம் விசாரித்தனர்.

பின்னர் இதுகுறித்து சமூகநலத்துறை சார்பில் வந்தவாசி மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி, சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி, ஏட்டு கலைச்செல்வி மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் இளம்பெண்ணிடம் இருந்த செல்போனை கைப்பற்றி சைபர் கிரைம் போலீசார் மூலம் ஆய்வு செய்தனர். அதில் இளம்பெண்ணிடம் அடிக்கடி பேசி வந்த வந்தவாசியை சேர்ந்த பழ வியாபாரி இம்ரான்(28), இவரது தம்பி இம்தியாஸ்(26), நசீர்(30), அலி(28) ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அதில் 4 பேரும் சேர்ந்து இளம்பெண்ணுக்கு பழங்கள் மற்றும் உணவு பொருட்களை வாங்கி கொடுத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதேபோல் வியாபாரிகள் சிலர், இளம்பெண்ணுக்கு உணவு வாங்கி கொடுத்து ஆட்டோவில் கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து வந்தவாசி மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இம்ரான், இம்தியாஸ், நசீர், அலி ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சிலரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.