தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆர்.கே.பேட்டை ஒன்றியம் பாலாபுரம் ஊராட்சிக்கு நீர் மேலாண்மை சான்றிதழ்: ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர், கலெக்டரிடம் வழங்கினார்

திருவள்ளூர், நவ.19: புதுதில்லியில் ஒன்றிய அரசின் ஜல்சக்தி அமைச்சகத்தின் சார்பில் நடைபெற்ற 6வது தேசிய நீர் விருதுகள் வழங்கும் விழாவில், நீர் மேலாண்மையில் சிறந்த ஊராட்சியாக தேர்வு செய்யப்பட்ட ஆர்.கே.பேட்டை ஒன்றியம் பாலாபுரம் ஊராட்சிக்கான சான்றிதழை, ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல், மாவட்ட கலெக்டர் பிரதாப்பிடம் வழங்கினார். புதுதில்லி விக்யான் பவனில் ஒன்றிய அரசின் ஜல்சக்தி அமைச்சகத்தின் சார்பில், 6வது தேசிய நீர் விருதுகள் வழங்கும் விழா நடந்தது. இவ்விழாவில் திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை ஒன்றியம், பாலாபுரம் ஊராட்சி நீர் மேலாண்மையில் சிறந்த ஊராட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டதை முன்னிட்டு, 3வது இடத்திற்கான விருதினை, ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப்பிடம் வழங்கினார்.

Advertisement

அப்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரும், இணை இயக்குநருமான ஜெயக்குமார் உடனிருந்தார். முன்னதாக, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பிரதாப், நீர்மேலாண்மையில் சிறந்த ஊராட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, தேசிய நீர் விருது பெற்றதை முன்னிட்டு ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம், பாலாபுரம் ஊராட்சியில் சிறப்பாக பணியாற்றிய ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், முன்னாள் வட்டார வளர்ச்சி அலுவலர், உதவி பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள், ஊராட்சி செயலர், ஊரக வளர்ச்சி மேலாண்மை வல்லுநர், மண்டல, வட்டார துணை அலுவலர், ஆகியோருக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

Advertisement

Related News