தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஊத்துக்கோட்டை ஆரணியாற்றின் மேம்பாலத்தில் தேங்கும் மழைநீர், மணல் திட்டுகள்: வாகன ஓட்டிகள் அவதி

ஊத்துக்கோட்டை, ஆக.13: ஊத்துக்கோட்டை - திருவள்ளுர் நெடுஞ்சாலையில் ஊத்துக்கோட்டையில் ஆரணியாற்றின் குறுக்கே ரூ.27 கோடியில் புதிதாக மேம்பாலப்பணிகள் கடந்த 2018ம் ஆண்டு தொடங்கி 2021ம் ஆண்டு முடிவடைந்தது. இந்த பாலத்தை ஊத்துக்கோட்டை மற்றும் 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் மழையின்போது இந்த பாலத்தில் தேங்கி நிற்கும் தண்ணீரில் பொதுமக்கள் வழுக்கி விழுகிறார்கள். மேலும், மணல் திட்டுகளும் அதிகளவில் சேர்ந்துள்ளதால், பைக்கிள் செல்பவர்கள் இதில் சிக்கி கிழே விழுகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், மணல் திட்டுகளை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், ஊத்துக்கோட்டை ஆரணியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தின் மீது, இந்த வழியாக செல்லும் மணல் லாரிகளில் இருந்து மணல் சிதறி விழுந்து, பாலத்தின் மீது மணல் திட்டுகள் காணப்படுகிறது. மேலும், சமீபத்தில் பெய்து வரும் மழையால் பாலத்தின் மீது தண்ணீரும் தேங்கி நிற்கிறது. இதனால், பாலத்தின் மீது பைக்கில் செல்பவர்களும், நடந்து செல்பவர்களும் கிழே விழுந்து விடுகிறோம். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மழை நீரையும், மணல் திட்டுக்களையும் அகற்ற வேண்டும் என்றனர்.

Advertisement

Advertisement

Related News