தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டெல்லியில் கார் குண்டுவெடிப்பு சம்பவம் தமிழக-ஆந்திர எல்லையில் வாகன சோதனை தீவிரம்

திருத்தணி, நவ.12: டெல்லியில் கார் குண்டு வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, திருத்தணியில் தமிழக -ஆந்திர மாநிலங்களின் எல்லையில் கண்காணிப்பு பணியில் உள்ள போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியில் நேற்று முன்தினம் இரவு காரில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் 9 பேர் உடல் சிதறி இறந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் பல வாகனங்கள் தீப்பிடித்து எரிந்து சேதமானது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Advertisement

இதையடுத்து, அனைத்து மாநிலங்களிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பஸ், ரயில் நிலையங்கள், பூங்கா, வணிக வளாகங்கள், மால்களில் போலீசார் தொடர் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்ட எஸ்பி விவேகானந்தா சுக்லா உத்தரவின்பேரில், திருத்தணி அருகே தமிழக - ஆந்திர எல்லைப் பகுதியான சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, பொன்பாடி சோதனை சாவடியில் போலீசார் நேற்று கண்காணிப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர். வடமாநிலங்களில் இருந்து ஆந்திர வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். முழு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தமிழக எல்லையில் நுழைய போலீசார் அனுமதக்கின்றனர். இதேபோல், பஸ், ரயில் நிலையங்களிலும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

திருவள்ளூர் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு சோதனை: டெல்லியில் நிகழ்ந்த வெடிகுண்டு சம்பவத்தைத் தொடர்ந்து, பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதன்படி, தமிழகத்தில் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் பஸ், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, திருவள்ளூர் ரயில்வே காவல் நிலையம் சார்பில் போலீசார் நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ரயில் நிலையத்திற்கு வந்த பயணிகளின் உடமைகளை தீவிர சோதனைக்கு உட்படுத்தினர். மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்தனர். அதன்பிறகு, பயணிகள் ரயில் நிலையத்திற்குள் நுழைய அனுமதித்தனர். அதேபோல், மின்சார ரயில்களில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதனால், திருவள்ளூர் ரயில் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.

Advertisement