தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாளை ஐடிஐ தொழில்நுட்ப தேர்வை 440 பேர் எழுதுகின்றனர்

தேனி, நவ. 15: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நாளை நடைபெற உள்ள ஐடிஐ தொழில்நுட்ப தேர்வினை தேனியில் 440 பேர் எழுத உள்ளனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த தொழில் நுட்பத் தேர்வான ஐடிஐ தொழிற்பயிற்சி இரண்டாம் நிலை தேர்வுகள் நாளை (நவ.16ம் தேதி) காலை மற்றும் மதியம் நடைபெற உள்ளது.இரண்டாம் நிலை கணிணி வழித் தேர்வினை தேனி மாவட்டத்தில் நாளை காலையும், மதியமும் ஆக இரண்டு நேரங்களில் தேர்வு நடக்க உள்ளது.

Advertisement

காலையில் நடைபெறும் தேர்வினை 220 பேரும், மதியம் நடைபெறும் தேர்வினை 220 பேரும் எழுத உள்ளனர். தேர்வர்கள் தேர்வாணையத்தின் அறிவுரையின்படி, தேர்வு நடைபெறும் நாளான நாளை (16-ம் தேதி) காலை 8 மணிக்கு முன்பாக தேர்வு மையத்திற்கு வருகை புரிய வேண்டும். காலை 8 மணிக்கு தேர்வு மையங்களில் நுழைவு வாயில்கள் மூடப்படும். காலை 8 மணிக்கு மேல் வரும் தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இத்தேர்வினை எழுதவுள்ள தேர்வர்கள் தேர்வு தொடர்பான விபரங்களுக்கு தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் கட்டுப்பாட்டு அறை எண் 94877 71077 என்றதொலைப்பேசி என்னை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். தேர்வர்கள் தேர்வு மையங்களுக்குள் தங்களது செல்போன்கள், மற்றும் பிற மின்னணு சாதனங்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை என மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்

 

Advertisement

Related News