தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தேவதானப்பட்டி அருகே ஓடைகளை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

தேவதானப்பட்டி, நவ. 12: தேவதானப்பட்டி அருகே எருமலைநாயக்கன்பட்டியில் உடைந்த ஓடைகளை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேவதானப்பட்டி முருகமலையில் இருந்து எருமலைநாயக்கன்பட்டி மற்றும் சில்வார்பட்டி ஆகிய இரண்டு ஊர்களுக்கு மத்தியில் ஓடை, ஜெயமங்கலம் வேட்டுவன்குளம் கண்மாய்க்கு செல்கிறது. கடந்த ஆண்டு பருவமழை அதிகளவு பெய்தது.

Advertisement

பருவமழை அதிகளவு பெய்ததால் ஓடைகள், ஆறுகள், வாய்க்கால்கள் என நீர்வரத்து பகுதி அனைத்திலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில் தேவதானப்பட்டி முருகமலையில் இருந்து, ஜெயமங்கலம் வேட்டுவன்குளம் கண்மாய்க்கு செல்லும் எருமலைநாயக்கன்பட்டி ஓடை சுமார் 10 இடங்களில் உடைப்பு ஏற்பட்டது. இந்த ஓடை உடைப்பினால் பல்வேறு பயிர் சாகுபடிகள் மழை வெள்ளநீரில் மூழ்கியது.

ஓடையில் உடைப்பு ஏற்பட்ட புகுந்த மழைநீர் சில விவசாய கிணறுகளுக்குள் புகுந்து கிணறு உடைப்பு ஏற்பட்டது. எருமலைநாயக்கன்பட்டி ஓடை உடைந்ததில் சில்வார்பட்டியைச் சேர்ந்த விவசாயிகள் 10கும் மேற்பட்டோர் பாதிப்படைந்தனர். எனவே, எருமலைநாயக்கன்பட்டி மற்றும் சில்வார்பட்டி விளைநிலங்கள் வழியாக வேட்டுவன்குளம் கண்மாய்க்கு செல்லும் ஓடை உடைப்பை விரைந்து சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement