Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மருமகனை வீடுபுகுந்து வெட்டிய தாய்மாமா

சின்னமனூர், மார்ச் 2: மருமகனை வீடுபுகுந்து வெட்டிய தாய்மாமா உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சின்னமனூர் அருகே மார்க்கையன்கோட்டை பேரூராட்சி 1வது வார்டு வடக்கு தெருவை சேர்ந்தவர் நிரஞ்சன் மகன் செந்தூரப்பாண்டி(32). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தாய்மாமா முருகன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது.

இந்நிலையில் கடந்த 24ம் தேதி செந்தூர்பாண்டி வீட்டிற்கு வந்த முருகன் உள்ளிட்டோர் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயமடைந்த செந்தூர்பாண்டி, அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக செந்தூர்பாண்டி சின்னமனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் முருகன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.