Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

திண்டுக்கல், மே 1:திண்டுக்கல் என்.ஜி.ஓ காலனியில் தேசிய நெடுஞ்சாலையில், ஆக்கிரமித்து வணிக வளாகங்கள் கட்டப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள அந்த ஆக்கிரமிப்பு வணிக வளாகங்களை அப்புறப்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வணிக கடைகளை அப்புறப்படுத்தும்படி உத்தரவு பிறப்பித்தது.

அந்த உத்தரவின் அடிப்படையில் தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள், வருவாய் துறையினர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடைகளை ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாகி அப்புறப்படுத்தினர். ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடைகளை போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.