Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கடமலை - மயிலை ஒன்றியத்தில் அதிகரித்து வரும் குடிநீர் பஞ்சத்தால் கடும் அவதி; துரித நடவடிக்கைக்கு வலியுறுத்தல்

வருசநாடு, ஜூலை 29: கடமலை - மயிலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் தற்போது குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனை தடுக்க அரசுத்தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

கடமலை - மயிலை ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்குட்பட்டு 18 ஊராட்சி மன்றங்கள் உள்ளன. இந்த 18 ஊராட்சிகளிலும் வசிக்கும் பொதுமக்களுக்கு, மூல வைகை ஆற்றில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது இந்நிலையில் கடந்த சில மாதங்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளான அரசரடி, வெள்ளிமலை, காந்திகிராமம் போன்ற பகுதிகளில் கோடை மழை பெய்யாததால், மூல வைகையாற்றில் நீர்வரத்து என்பது முற்றிலும் இல்லாமல் இருக்கிறது. இதனால் கடமலை - மயிலை ஒன்றியத்தில் தற்போது கடும் குடிநீர் பஞ்சம் நிலவி வருகிறது.