Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

வருசநாடு ஊராட்சியில் சமுதாயக்கூடம் அமைக்க கோரிக்கை

வருசநாடு, ஜூலை 24: வருசநாடு ஊராட்சியில் பெருமாள் கோவில் தெரு பகுதியில் ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதிகளில் புதிய சமுதாயக்கூடம் வேண்டி பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை மனுவாக அளித்து வருகின்றனர். இருப்பினும் அவர்கள் ேகாரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இதனால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தனியார் மண்டபங்களில் அதிக வாடகைக்கு வசந்தவிழா, காதணி விழா, திருமண விழா உள்ளிட்டவற்றை நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.