Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பசியாலும் தாகத்தாலும் தவிக்கும் வன விலங்குகள் வனப்பகுதியில் தண்ணீர் தொட்டிகள் தேவை

கூடலூர், மே 20: மலைப்பாதையில் கடும் வறட்சி ஏற்பட்டு வரும் நிலையில் வன விலங்குகளுக்கு கூடுதல் தண்ணீர் தொட்டிகள் அமைக்க வேண்டுமென்று வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாவட்டத்தின் வனப்பகுதியில் யானை, காட்டுமாடு, சிறுத்தை, கரடி, செந்நாய் உள்ளிட்ட பெரிய விலங்குகளும், குரங்கு, மான், முயல் போன்ற சிறிய வகை விலங்குகளும் ஏராளமான அளவில் வசித்து வருகின்றன. தற்போது நிலவி வரும் சுட்டெரிக்கும் வெயிலால், வனப்பகுதியில் உள்ள இயற்கை குளம், குட்டைகள் மற்றும் தடுப்பணைகள் முற்றிலும் வற்றிவிட்டன. பசுமை இழந்து காணப்படும் காடுகளில் அனல் காற்று வீசுவதால், செடி கொடிகளும் காய்ந்து கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.