Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

மூல வைகையில் நீர்வரத்து ‘ஜீரோ’

வருசநாடு, ஜூலை 9: வருசநாடு அருகே, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் வெள்ளிமலைப் பகுதியில் மூல வைகை உருவாகி, கடமலை-மயிலை ஒன்றியத்தில் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக பாய்ந்து ஆண்டிபட்டி அருகே, வைகை அணையில் சேகரமாகிறது. இந்த ஆறு மூலம் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெறுகிறது. இந்நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளான வெள்ளிமலை வனப்பகுதியில் போதிய மழை இல்லாததால், மூல வைகை ஆற்றில் நீர்வரத்து இல்லாமல், வறண்ட மணல் மேடுகளாக காட்சியளிக்கிறது.