தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெண் குழந்தைக்கு உரிமைக்கோருபவர் தகவல் கூறலாம்

 

Advertisement

ஈரோடு, ஜன.24: ஈரோடு ரயில் நிலையத்தில் மீட்கப்பட்ட பெண் குழந்தைக்கு, உரிமை கோருபவர்கள் அதற்கான ஆவணங்களுடன், அறிவிப்பு வெளியான 30 நாளுக்குள் தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது : கடந்த 20.02.2023 அன்று, செங்கோட்டை ரயிலில் திருநெல்வேலி வழியாக, ஈரோடு வரை பயணம் செய்த ஒருவர் ஆதரவற்ற நிலையில் உள்ள பெண் குழந்தையை எடுத்து உரிய ஆவணங்கள் இல்லாமல் முறையற்ற முறையில் வளர்த்து வந்துள்ளார்.

இது தொடர்பாக, குழந்தை கடத்தல் பிரிவு காவல் ஆய்வாளருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், கடந்த 19.08.2024 அன்று, குழந்தை மீட்கப்பட்டு, ஈரோடு மாவட்டம் குழந்தைகள் நலக்குழு வசம் ஒப்படைக்கப்பட்டது. இதுவரை குழந்தையின் பெற்றோர் குறித்த விவரங்கள் தெரியவில்லை.

எனவே, இந்த குழந்தையின் பெற்றோர் அல்லது உரிமை கோருபவர்கள் அதற்கான ஆவணங்களுடன் இந்த அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்குள் தகவல் தெரிவிக்கலாம். அவ்வாறு இல்லாத போது இந்த குழந்தைக்கு சட்டப்பூர்வ பெற்றோர் இல்லை எனக்கருதி, தத்தெடுத்தல் ஒழுங்குமுறை விதிகள் 2022ன் படி தத்து வழங்கும் முறை மேற்கொள்ளப்படும். குழந்தையின் தற்போதைய வயது 1 வருடம் 6 மாதங்களாகும். இவ்வாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement