தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவையாறு அருகே தாளடி நடவு பணிகளில் விவசாயிகள் மும்முரம்

திருவையாறு, அக்.26: திருவையாறு அருகே திருவேதிக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 500 ஏக்கரில் விவசாயிகள் தாளடி நடவு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். திருவையாறு அருகே திருவேதிக்குடி, ராமாபுரம், தோட்டக்காடு, ஆலங்குடி, மானாங்கோரை உள்ளிட்ட பகுதிகளில் போர்வெல் மூலம் சுமார் 500 ஏக்கரில் முன் பட்ட குறுவை சாகுபடி பணிகள் நடந்து அறுவடை பணிகள் முடிந்தது. தற்போது தாளடி நடவு பணிகள் நடந்து வருகிறது .

Advertisement

இதில் டிகேஎம்15 ரக புது வகை நெல் இதன் வயது 130 நாள். நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது சன்னரகம் மகசூல் ஏக்கருக்கு 60 கிலோ கொண்ட மூட்டை 60 மூட்டை கிடைக்கும். சென்ற ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நெல் மற்றும் சிஆர் 1009வகை மோட்டாரகம் ஆகிய ரகங்கள் அதிகமாக திருவேதிக்குடி சுற்றுவட்டாரத்தில் 500 ஏக்கருக்கும் மேல் தாளடி நடவு செய்யப்பட்டு வருகிறது. திருவேதிக்குடியில் தாளடி விதை நெல்கள் நாற்று விட்டு தற்போது நடவு செய்வதற்காக விவசாய தொழிலாளர்கள் நாற்று பறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது வடகிழக்கு பருவ மழை தொடங்கி பெய்து வந்தாலும், ஆற்றில் தண்ணீர் இல்லாததால் மழைநீர் உடனடியாக வடிந்து விடுவதால் தாளடி பயிர்களுக்கு பாதிப்பு இல்லை என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

இது குறித்து திருவேதிக்குடி விவசாயி வெங்கடாசலம் கூறியதாவது; இப்பகுதியில் போர் வசதி இருப்பதால் சம்பா சாகுபடி செய்வதில்லை. முன்பட்ட குறுவை சாகுபடி செய்து மழைக்கு முன்னதாக அறுவடை செய்து விடுவார்கள். பின்னர் தாளடி நடவு பணிகள் தொடங்கும். ஆற்றில் தண்ணீர் வந்ததும் அதனை வைத்து தாளடி பணிகள் தொய்வு இல்லாமல் நடைபெறும். தாளடி பயிர்களுக்கு மழை நல்லது, பாதிப்பு ஏற்படாது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Related News