Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

தஞ்சை சிவகங்கை பூங்காவில் உள்ள செயற்கை நீரூற்று பயன்பாட்டுக்கு வருமா?

தஞ்சாவூர், மே 23: தஞ்சை சிவகங்கை பூங்காவில் உள்ள செயற்கை நீரூற்றை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சுற்றுலா பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சை பெரியகோயில் அருகே சிவகங்கை பூங்கா அமைந்துள்ளது. சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த பூங்கா ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டு தற்போது மக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. குழந்தைகளுக்கான விளையாட்டு சாதனங்கள், இருக்கைகள், விலங்குகளின் சிற்பங்கள், புல்தரை, சோழர் வரலாற்றை விளக்கக் கூடிய மூன்று படைப்பு சிற்பங்களுடன் கதை முற்றம், நீச்சல்குளம் போன்ற பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.