தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மயிலாடுதுறையில் குருத்தோலை ஞாயிறு பவனி

மயிலாடுதுறை, மார்ச் 26: மயிலாடுதுறை தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். இயேசு கிறிஸ்து மரித்து, உயிர்த்த நிகழ்வுகளை கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் தவக்காலமாக அனுசரித்து, இதன் முக்கிய நிகழ்வாக புனித வார முதல் நாளான ஞாயிறு குருத்தோலை ஞாயிறாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு மயிலாடுதுறையில் உள்ள தேவாலயங்களில் குருத்தோலை பவனி மற்றும் சிறப்பு பிரார்த்தனை வழிபாடுகள் நடைபெற்றது. மயிலாடுதுறை புனித சவேரியார் ஆலயத்தில் மறைவட்ட அதிபர் பங்குத்தந்தை தார்சிஸ்ராஜ் அடிகளார் தலைமையில் குருத்தோலை பவனி மற்றும் சிறப்பு திருப்பலி நேற்று முன்தினம் நடைபெற்றது.

Advertisement

மயிலாடுதுறை டிஇஎல்சி பரிசுத்த இம்மானுவேல் தேவாலயத்தில் சபைகுரு ஜெயசீலன் தலைமையில் குருத்தோலை பவனி மற்றும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதேபோல், கூறைநாடு புனித பதுவை மற்றும் வனத்து அந்தோணியார் திருத்தலத்தில் குருத்தோலை பவனி பங்குத்தந்தை ஜான் பிரிட்டோ அடிகளார் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து ஆலயத்தில் நடைபெற்ற சிறப்புத் திருப்பலியில் தமிழக அன்பிய பணிக்குழு செயலாளர் ஜான்போஸ்கோ அடிகளார் என்ற தலைப்பில் மறையுரையாற்றினார். மயிலாடுதுறை தேவாலயங்களில் நடைபெற்ற குருத்தோலை பவனி மற்றும் சிறப்பு பிரார்த்தனை வழிபாட்டு நிகழ்வுகளில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் தங்கள் கைகளில் குலுத்தோலைகளை ஏந்தி வீதி உலா வந்தனர்.

Advertisement