தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருச்சி அருகே அரசு கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை

மணிகண்டம், டிச.6:திருச்சி அருகே அரசு கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை செய்து கொண்டார். திருச்சி மாவட்டம், மணிகண்டம் அருகே உள்ள சேதுராப்பட்டியில் அரசு பொறியியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் திருப்பூர் மாவட்டம் ஆண்டிபுதூரை சேர்ந்த மணிகண்டன் என்பவரது மகன் தருண்கார்த்திக் (18) என்பவர் கல்லூரி விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு இன்ஜினியரிங் படித்து வந்தார். இந்நிலையில் மாணவர் தருண்கார்த்திக் நேற்று கல்லூரிக்கு செல்லாமல் விடுதியிலேயே இருந்துள்ளார். மாலை 5 மணியளவில் சக மாணவர்கள் விடுதிக்கு வந்து பார்த்தபோது, விடுதி அறையில் உள்ள மின்விசிறியில் மாணவர் தருண்கார்த்திக் தூக்கில் சடலமாக தொங்கினார்.

Advertisement

அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் இதுகுறித்து விடுதிக்காப்பாளர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மணிகண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தூக்கில் தொங்கிய மாணவனை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து மாணவர் தற்கொலை செய்து கொண்டதற்காந காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement