தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

34 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை வரும் 9ம் தேதி முதல் முன்பதிவு தொடக்கம் திருவண்ணாமலை மாவட்டத்தில்

திருவண்ணாமலை, செப்.5: திருவண்ணாமலை மாவட்டத்தில், நடப்பு ஆண்டின் சொர்ணவாரி பருவத்திற்கான நேரடி கொள்முதல் நிலையங்கள் வரும் 11ம் தேதி முதல் 34 இடங்களில் தொடங்கப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில், நடப்பு ஆண்டின் சொர்ணவாரி பருவத்தில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 34 இடங்களில் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. வரும் 9ம் தேதி முதல் விவசாயிகள் முன் பதிவு செய்து கொள்ளலாம். அதன்படி, திருவண்ணாமலை தாலுகா பெரிய கிளாம்பாடி, கீழ்பென்னாத்தூர் தாலுகா அணுக்குமலை, சோமாசிபாடி, தண்டராம்பட்டு தாலுகா தண்டராம்பட்டு, செங்கம் தாலுகா அரட்டவாடி, பீமானந்தல், மேல்முடியனூர், காரப்பட்டு, கலசபாக்கம் தாலுகா எலத்தூர், ஆதமங்கலம், கடலாடி, போளூர் தாலுகா எடப்பிறை, குன்னத்தூர், ஆரணி தாலுகா அரியாப்பாடி, தச்சூர்.

Advertisement

வந்தவாசி தாலுகா மருதாடு, கொவளை, பெருங்களத்தூர், செய்யாறு தாலுகா பாராசூர், மேல்சீசமங்கலம், ஆலத்துறை, ஆலத்தூர், வெங்கோடு, தவசிமேடு, ஆக்கூர், எச்சூர், வெம்பாக்கம் தாலுகா வெம்பாக்கம், வடஇலுப்பை, நாட்டேரி, தென்னம்பட்டு, அரியூர், கீழ்நெல்லி, தூசி, வெங்களத்தூர் ஆகிய இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது. எனவே, கிராம நிர்வாக அலுவலரிடம் இருந்து அடங்கல், உதவி வேளாண்மை அலுவலரிடம் இருந்து மகசூல் சான்று பெற்று விவசாயிகள் முன் பதிவு செய்யலாம்.

அதோடு, ஆதார், சிட்டா மற்றும் வங்கிக்கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை நேரில் கொண்டு சென்று, சம்பந்தப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணிபுரியும் மைய அலுவலரிடம் அளிக்க வேண்டும். பதிவு செய்யப்படும் விபரங்கள், கள தணிக்கை செய்யப்பட்டு தகுதியின் அடிப்டையில் கொள்முதல் செய்ய ஏற்கப்படும். மேலும், கொள்முதல் செய்வதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட தேதி மற்றும் நேரத்தில் மட்டுமே சம்பந்தப்பட்ட மையத்திற்கு சென்று நெல் அளிக்க வேண்டும். முன் பதிவு செய்வதில் சந்தேகம், சான்றுகள் பெறுதல், நெல் கொள்முதல் செய்யும் போது தேவையற்ற கால தாமதம் அல்லது பிரச்னைகள் ஏற்பட்டால் 9487262555 (தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகம்) மற்றும் 6385420976 (தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு) ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News