தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இதய தின விழிப்புணர்வு பேரணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

Advertisement

தண்டையார்பேட்டை: உலக இதய தினத்தை முன்னிட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நடந்த பேரணியை ஐட்ரீம்ஸ் மூர்த்தி எம்எல்ஏ தொடங்கி வைத்தார். ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் உலக இதய தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. உலக இதய தினத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க விழிப்புணர்வு பேரணி மருத்துவமனையில் நடைபெற்றது. இந்த பேரணியை ராயபுரம் எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். மருத்துவமனை வளாகம் முழுவதும் இந்த பேரணி நடைபெற்றது.

பின்னர், இதயவியல் துறையின் தலைவர் கண்ணன் கூறுகையில், ‘‘இந்தாண்டு 68,619 புறநோயாளிகளும், 15,188 உள்நோயாளிகளும் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர். மேலும் 44,267 எக்கோ கார்டியோகிராம், 24,690 ஆஞ்சியோகிராம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. நோயாளிகள் அனுமதிக்கப்ட்ட ஒரு மணிநேரத்திற்குள் உறைகுழாய் வைத்தல் போன்ற சிகிச்சைகள் சிறப்பான முறையில் செய்யப்பட்டு வருகின்றன. முதலமைச்சரால் கொண்டுவரப்பட்ட இதயம் காப்போம் மற்றும் ஸ்டேமி மாரடைப்பு திட்டம் போன்ற முதன்மை திட்டங்கள் மூலமாக மாரடைப்பு ஏற்படும் நோயாளிகளுக்கு ஆரம்ப சுகாதார நிலையங்களிலேயே லோடிங் டோஸ் எனப்படும் முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்படுகின்றனர். இதனால் மாரடைப்பால் ஏற்படும் இறப்பு விகிதம் வெகுவாக குறைவதுடன், நீண்ட நாட்கள் அவர்கள் வாழ்வதற்கு பயனுள்ளதாக அமைகிறது.

மேலும் மக்களைத்தேடி மருத்துவம், வருமுன் காப்போம் போன்ற பல்வேறு திட்டங்கள் மக்களுக்கு மிகவும் பயனளிக்கின்றன. இத்திட்டங்கள் மூலம் பல்வேறு சிகிச்சைகள் அளிப்பதில் இம்மருத்துவமனை சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றது,’’ என்றார். மூத்த இதயவியல் நிபுணர் சொக்கலிங்கம் ‘இதய நோய்கள் தடுப்பு’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இத்துறையின் சார்பாக செய்யப்பட்டிருந்த கண்காட்சியில் இதய நோய்களுக்கு சிகிச்சை பயன்படுத்தப்படும் பல்வேறு உபகரணங்கள் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. நோய் குறித்த விழிப்புணர்வு பிரசுரங்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. இதயநோய் தடுப்பதற்கான உணவுமுறைகள் அடங்கிய கையேடு வெளியிடப்பட்டது. இதில் மருத்துவமனை முதல்வர் பாலாஜி, பேராசிரியர்கள், செவிலியர்கள் பலர் கலந்து கொண்ட்னர்.

Advertisement

Related News