Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முதியோர் இல்லங்களை பதிவு செய்வது கட்டாயம்

சிவகங்கை, ஜூன் 4: சிவகங்கை மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள், முதியோர் இல்லங்கள் உள்ளிட்ட அனைத்து இல்லங்களும் பதிவு மற்றும் உரிமம் பெற்று செயல்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்டம் முழுவதும் குழந்தைகள் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான இல்லங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லங்கள், போதை பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு இல்லங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லங்கள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.

இந்த இல்லங்கள் பதிவு மற்றும் உரிமம் பெற்று செயல்பட வேண்டும். பதிவு பெறாமல் மாவட்டத்தில் செயல்படும் இல்லங்கள் மற்றும் விடுதிகள் ஆகியவை, பதிவு செய்வதற்கு குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் அல்லது சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். உரிமம் இல்லாமல் செயல்படும் இல்லங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.