தேவகோட்டை, ஜன.28: தேவகோட்டை சுப்ரமணியசுவாமி கோயிலில் தை கார்த்திகை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தை கார்த்திகையை முன்னிட்டு தேவகோட்டை செல்லப்ப செட்டியார் கோயிலில் வள்ளி தேவசேனா, சமேத சுப்ரமணியசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தேவசேனா, சமேத சுப்ரமணியசுவாமி காட்சியளித்தனர். ஏராளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்து வழிபட்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
+



