Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அண்ணா நினைவுநாளை முன்னிட்டு கோயிலில் பொதுவிருந்து எம்எல்ஏ துவக்கி வைத்தார்

திருப்புவனம், பிப்.4: பேரறிஞர் அண்ணா நினைவுநாளை முன்னிட்டு மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு, பொது விருந்து மற்றும் பெண்களுக்கு புடவைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி ரவிக்குமார் பொது விருந்தை துவக்கி வைத்து கலந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு புடவைகள் வழங்கினார். நிகழ்ச்சியில் திருப்புவனம் தாசில்தார் ஆனந்த பூபாலன், தேவி, உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர் கென்னி மற்றும் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் கடம்பசாமி, மாவட்ட விவசாய அணி அச்சங்குளம் முருகன், டி.ஆர்.சேகர், மடப்புரம் அப்பாச்சாமி, ஏனாதி இளங்கோவன் உட்பட திமுகவினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.