தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆந்திர எல்லையில் இருந்து கடத்திவந்து திருத்தணியில் மணல் விற்பனை அமோகம்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

 

Advertisement

திருத்தணி, செப். 30: திருத்தணி அருகே பள்ளிப்பட்டு பகுதியில் செயல்பட்டு வந்த அரசு மணல் குவாரி ஓராண்டுக்கு முன்பு மூடப்பட்டது.  இதனால், திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் மணலுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வரும் காரணத்தால் கட்டிடப் பணிகள் முடங்கி வருகிறது. இந்நிலையில், திருத்தணி அருகே ஆந்திர எல்லை பகுதியில் அமைந்துள்ள நகரி கொசஸ்தலை ஆற்றில் இருந்து இரவு நேரங்களில் லாரிகள் மற்றும் டிராக்டர்களில் மணல் நிரப்பி கொண்டு திருத்தணி, திருவலாங்காடு, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு ஆகிய பகுதிகளில் மணல் கொள்ளை விற்பனையில் சிலர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் முதலமைச்சர் பாதுகாப்பு பணிக்காக திருத்தணி உட்கோட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இருந்து போலீசார் காஞ்சிபுரம் சென்று விட்ட நிலையில், இரவு முழுவதும் விடிய விடிய லாரி மற்றும் டிராக்டர்களில் மணல் கடத்தி வந்து விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, திருத்தணி நகரில் முக்கிய சாலைகள் மற்றும் கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களில் மணல் குவித்து வைத்திருந்திருந்தனர். இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Advertisement

Related News