Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஏற்காட்டில் கோடை மழை

ஏற்காடு, ஏப்.30: சேலம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கோடை வெயில் கொளுத்தி வருகிறது. பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான ஏற்காட்டிலும் வெப்பம் தகித்து வருகிறது. நண்பகல் வேளையில் சுட்டெரிக்கும் வெயிலால் சாலைகளில் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. நேற்று காலை முதலே வெயில் அதிகரித்து காணப்பட்டது. மதிய நேரத்தில் ஒரு சில இடங்களில் அனல்காற்று வீசிய நிலையில், பிற்பகல் 3 மணியளவில் ஏற்காடு மற்றும் சுற்றுப்புற பகுதியில் மழை பெய்ய தொடங்கியது. சுமார் அரைமணி நேரம் நீடித்த மழையால், வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால், உள்ளூர்வாசிகள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.