தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பயணிகள் நிழற்கூடம் அமைக்க எதிர்ப்பு

இளம்பிள்ளை, நவ.12: இளம்பிள்ளை அருகே, பயணிகள் நிழற்கூடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த நிலையில், திமுக-அதிமுகவினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இடங்கணசாலை நகராட்சி கே.கே.நகர், சாத்தம்பாளையம் செல்லும் பிரிவு சாலையில், திமுக பிரமுகரான அருள் என்பவரது வீட்டில், கே.கே.நகர் மின்சார அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் எதிரே சங்ககிரி தொகுதி அதிமுக எம்எல்ஏ சுந்தரராஜன் தொகுதி நிதியிலிருந்து, பயணிகள் நிழற்கூடம் அமைக்க தீர்மானிக்கப்பட்டது. வரும் வெள்ளிக்கிழமை பூமிபூஜை போட இருந்த நிலையில், அருள் தனது வீடு முன்பு நிழலுக்காக சிமெண்ட் ஷெட் அமைக்க ஏற்பாடு செய்து வந்தார். அதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து நேற்று ‌தடுத்து நிறுத்தினர். இதனை அறிந்த திமுகவினர் அங்கு விரைந்தனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

Advertisement

இதுகுறித்து தகவலறிந்த மகுடஞ்சாவடி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் எஸ்ஐ ஜீவிதா உள்ளிட்ட போலீசார், விரைந்து வந்து இடங்கணசாலை நகர அதிமுக செயலாளர் சிவலிங்கம், மகுடஞ்சாவடி வடக்கு ஒன்றிய அதிமுக பொறுப்பாளர் செல்வகுமார், இடங்கணசாலை நகர திமுக பொருளாளர் சிவக்குமார் உள்ளிட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் நெடுஞ்சாலை துறையினர் அளவீடு செய்த பின்னர் நிழற்கூடமும், சிமெண்ட் ஷெட்டும் அமைத்து கொள்ள வேண்டும் எனக்கூறி இருதரப்பினரையும் அனுப்பி வைத்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement