தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரசு பள்ளி மாணவிகள் திறனறித்தேர்வில் சாதனை

ஜலகண்டாபுரம், டிச.3: ஜலகண்டாபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், திறனறித்தேர்வில் தொடர்ந்து நான்காவது ஆண்டாக மாநில அளவில் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். அரசுப்பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ்மொழி இலக்கியத் திறனறித்தேர்வு, கடந்த அக்டோபர் மாதம் தமிழகம் முழுவதும் நடந்தது. இத்தேர்வில் 2,70,508 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு தேர்வெழுதினர். தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இதில், சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இருந்து தேர்வெழுதிய 206 மாணவிகளில் 64 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தொடர்ந்து நான்காவது ஆண்டாக(2022-29 பேர், 2023-32 பேர், 2024-41 பேர், 2025-64 பேர்) ஒரே பள்ளியில் இருந்து அதிக மாணவிகள் தேர்ச்சி என்ற மாநில அளவிலான சாதனையை இப்பள்ளி தக்க வைத்துள்ளது. தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகள் மற்றும் பயிற்சி அளித்த தமிழ் ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருது பெற்ற லெனின், பட்டதாரி ஆசிரியை ஜானகி ஆகியோருக்கு தலைமை ஆசிரியை கலா, உதவித் தலைமை ஆசிரியர் அருண் கார்த்திகேயன் மற்றும் சக ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு மாதந்தோறும் கல்வி உதவித்தொகையாக ரூ.1,500 வீதம் இரண்டு ஆண்டுக்கு ரூ.33,000 வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement