தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஓய்வு அதிகாரி வீட்டில் 6 பவுன் நகை திருட்டு

சங்ககிரி, டிச.3: சங்ககிரி அருகே அரசு போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற அதிகாரி வீட்டில் பூட்டை உடைத்து 6 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே கோட்ட வருதம்பட்டி ஊராட்சி வளையசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜாமணி(65). அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற அதிகாரியான இவரது மனைவி புஷ்பவள்ளி(56). இவர் திருச்செங்கோட்டில் உள்ள அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகின்றனர். ராஜாமணி, புஷ்பவள்ளி இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். நேற்று காலை, வழக்கம்போல் புஷ்பவள்ளி வேலைக்கு சென்று விட்டார். தொடர்ந்து வீட்டை பூட்டி விட்டு ராஜாமணியும் வெளியில் சென்று விட்டார்.

Advertisement

மதியம் 2 மணியளவில் வீடு திரும்பியபோது, பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தை கண்டு திடுக்கிட்டார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ திறந்து கிடந்தது. உள்ளே இருந்த துணிகள் சிதறிக் கிடந்தன. 6 பவுன் தங்க நகையை காணவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில், சங்ககிரி போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரித்தனர். இதில், வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகையை திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது. சம்பவ இடத்தில் பதிவாகியிருந்த தடயங்களை கைரேகை நிபுணர்கள் பதிவு செய்தனர். மேலும், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்க விடப்பட்டது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement