Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தேங்காய் சுடும் அழிஞ்சிமர குச்சி விற்பனைக்கு குவிப்பு

சேலம், ஜூலை 16: ஆடி 1ம் தேதியையொட்டி சேலம் மார்க்கெட்டில் தேங்காய் சுடும் அழிஞ்சி மரக்குச்சிகள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி 1ம் தேதியன்று தேங்காய் சுடும் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படும். நடப்பாண்டு ஆடி 1ம் தேதி, நாளை (17ம் தேதி) வருகிறது. இந்நாளில் தேங்காய் சுட்டு விநாயகருக்கு படையலிடுவது வழக்கம். இதையொட்டி தேங்காய் சுட பயன்படுத்தப்படும் அழிஞ்சி மரக்குச்சிகள் விற்பனைக்காக சேலம் ஆனந்தா காய்கறி மார்க்கெட், பால்மார்க்கெட், செவ்வாய்பேட்டை, பட்டைகோயில், அம்மாபேட்டை, வ.உ.சி. மார்க்கெட் உள்பட பல்வேறு பகுதிகளில் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஆடி 1ம்தேதியன்று தேங்காய் சுடும் பண்டிகை விமரிசையாக நடக்கும். இந்நாளில் தேங்காயை தரையில் தேய்த்து கொள்வார்கள். பின்னர் மூன்று கண்களில் ஒரு கண்ணில் ஓட்டைபோட்டு, அதில் எள், நாட்டுச்சர்க்கரை, பொட்டுக்கடலை, அவல் உள்ளிட்டவைகளை துளைத்து நெருப்பில் தேங்காய் சுடப்படும். பின்னர் சுட்ட தேங்காயை விநாயகருக்கு படையலிட்டு நண்பர்கள், உறவினர்களுக்கு வழங்கி உண்பார்கள். ஆடி 1ம்தேதியையொட்டி சேலம் மாநகர பகுதியில் அழிஞ்சி மரக்குச்சி விற்பனைக்கு குவித்துள்ளோம். ஒரு குச்சி ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனை செய்து வருகிறோம், என்றனர்.