Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அழகாபுரத்தில் படிக்கட்டில் தவறி விழுந்தவர் பலி

சேலம், மே 6: சேலம் அழகாபுரம் ரெட்டியூரை சேர்ந்தவர் சுகுமார் (50). இவர் கடந்த 1ம்தேதி இரவு வீட்டின் மாடியில் படுத்து உறங்கியுள்ளார். சிறுநீர் கழிக்க கீழே வந்த அவர் மீண்டும் மாடி ஏறியுள்ளார். அப்போது கால் தவறி கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று இரவு சிகிச்சை பலன் இன்றி சுகுமார் இறந்தார். இதுகுறித்து அழகாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அவரது முகம் வீங்கியிருந்ததால் தீவிர விசாரணை நடந்து வருகிறது.