தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வெளிநாடுகளுக்கு விமானத்தில் பறக்கும் ரோஜா பூக்கள்: காதலர் தினத்தை முன்னிட்டு விற்பனை அமோகம்

கோவை, பிப். 13: ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 14ம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் காதலர்கள் பரிசுப்பொருட்கள் அல்லது பூக்கள் கொடுத்து தங்களுடைய காதலை சொல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அதில், ரோஜா பூக்கள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இதன் காரணமாக, கோவை பூ மார்க்கெட்டில் ரோஜா பூக்களின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. ஏராளமானவர்கள் ரோஜா பூக்களை வந்து வாங்கி செல்கின்றனர். இது குறித்து பூ வியாபாரிகள் கூறியதாவது: காதலர் தினத்தை முன்னிட்டு ரோஜா பூக்களின் விற்பனை அதிகரித்துள்ளது.

Advertisement

இளைஞர்கள், பெண்கள் அதிகளவில் ரோஜாக்களை வாங்கி செல்கின்றனர். ஒரு ரோஜாவின் விலை 50 ரூபாயிலிருந்து விற்பனை செய்யப்படுகிறது. பூக்களின் தன்மைக்கு ஏற்ப விலை வைக்கப்படுகிறது. துபாய், சார்ஜா, மஸ்கட் உள்ளிட்ட போன்ற வெளிநாட்டு நகரங்களுக்கும் கடந்த ஒரு வார காலமாக ரோஜா பூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. அவை கோவை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன. அதுமட்டுமில்லாமல் ஈரோடு, சேலம், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் ரோஜா பூக்கள் அதிகளவில் அனுப்பப்பட்டு வருகின்றன.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement

Related News