தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டி ஆர்எம்கே பள்ளி மாணவனுக்கு தங்கம்

கும்மிடிப்பூண்டி, அக்.4: தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம், வெள்ளிப் பதக்கம் வென்ற ஆர்எம்கே பள்ளி மாணவனுக்கு பள்ளிக்குழுமம் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. டெல்லியில் தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி கடந்த வாரம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கேரளா, டெல்லி, ஆந்திரா, ஜார்க்கண்ட், உத்தர பிரதேசம், பீகார், ஒடிசா, அரியானா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Advertisement

இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கவரப்பேட்டை ஆர்.எம்.கே. ரெசிடென்சியல் பள்ளி மாணவன் ஜி.திலீப், துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டார். அதில் அவர் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு, குரூப்பிங் சுடுதல் போட்டியில் அபரிமிதமான வெற்றியை பெற்று தங்கம், வெள்ளி பதக்கங்களையும், கோப்பையையும் வாங்கினார்.

அவருக்கு டிஜி என்.சி.சி. லெப்டினன்ட் ஜெனரல் குர்பிர்பால் சிங் உள்ளிட்ட ராணுவ உயர் அதிகாரிகள் பதக்கம், கோப்பைகளை வழங்கினர். தொடர்ந்து மாணவன் திலீப்புக்கு, கல்வி குழுமத் தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம், தாளாளர் யலமஞ்சி பிரதீப், தலைமை ஆசிரியர் சப்னா சன்கலா மற்றும் என்சிசி அதிகாரி முகமது கனி ஆகியோர் மாணவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement