Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக சிறந்த திட்டங்களை நிறைவேற்றும் முதல்வர்

அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பெருமிதம்

காரைக்குடி, பிப்.5: மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக சிறந்த திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார் என அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில், முதல்வரின் அறிவிப்பின்படி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு பதிவாளர் முனைவர் செந்தில்ராஜன் வரவேற்றார். துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் ஜி.ரவி தலைமை வகித்தார். எம்எல்ஏ மாங்குடி முன்னிலை வகித்தார். துணைமேயர் நா.குணசேகரன் வாழ்த்துரை வழங்கினார். இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினார். அப்போது அமைச்சர் பேசியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலினின் சீர்மிகு நல்லாட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு சீரிய திட்டங்களை மக்களுக்கு தந்துள்ளார். இதில் மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தி, அவர்கள் உயர்கல்வி படிப்பதால் பெற்றோர்