தொண்டி, ஆக.10: தொண்டி அருகே முன்விரோதம் காரணமாக கோயில் திருவிழாவில் தகராறில் 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர்.தொண்டி அருகே உள்ள நாரேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் காளிமுத்து (50). இவருக்கும் இதே ஊரை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.இந்நிலையில் நேற்று முன்தினம் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவில் மீண்டும் தகராறு ஏற்பட்டு காளிமுத்து, அவரது மனைவி முனீஸ்வரி, மகள் மேகலா ஆகியோரை தாக்கியதாக கொடுத்த புகாரின் அடிப்படையில், இதே ஊரை சேர்ந்த சண்முகம், சுப்பையா, காளிமுத்து, பிரபாகரன், முனியசாமி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
+
Advertisement




