தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருப்புத்தூரில் வழக்கறிஞர் சங்கம் ஆர்ப்பாட்டம்

 

Advertisement

திருப்புத்தூர், டிச.10: திருப்புத்தூர் நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீதிமன்றங்களில் கடந்த டிச.1ம் தேதி முதல் அனைத்து விதமான வழக்குகளிலும் இ.பைலிங் முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த முறையில் வழக்கறிஞர்களுக்கு பலவிதமான சிரமங்கள் இருப்பதாகவும், இ.பைலிங் முறையாக செயல்படாமலும், செயல்படுத்த முடியாமலும் உள்ளது என்றும் வழக்கறிஞர்கள் கூறி நீதிமன்ற பணிகளில் இருந்து விலகி இருந்து வருகின்றனர்.

மேலும் வழக்கறிஞர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீதிமன்றங்களில் ஆர்ப்பாட்டமும், உண்ணாவிரத போராட்டங்களும் செய்து வருகின்றனர். திருப்புத்தூர் நீதிமன்றம் முன்பு நேற்று வழக்கறிஞர் சங்கத் தலைவர் ராஜசேகரன் தலைமையில் இ.பைலிங் முறையை ரத்து செய்யக்கோரி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மூத்த வழக்கறிஞர்கள் பழனிச்சாமி, செந்தில்குமார், சஞ்சீவிக்குமரன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.

Advertisement