Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வயலோகம் முத்துமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா

இலுப்பூர், மே 19 : அன்னவாசல்அருகே உள்ள வயலோகம் முத்துமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. சுற்று வட்டார பகுதியில் இருந்து கிராம மக்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பல்லாக்கில் பூக்களை கொண்டு வந்து அம்மனுக்கு சாற்றி சிறப்பு வழிபாடு செய்தனர்

அன்னவாசல் அருகே வயலோகத்தில் முத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இக் கோயில் இப் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் ஆகும். இக்கோயிலில் ஆண்டு தோறும் நடைபெறும் பூச்சொரிதல் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதைமுன்னிட்டு, நேற்று முன் தினம் காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.. தொடர்ந்து முத்து மாரியம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இரவு சுற்று வட்டார பகுதியில் இருந்து கிராம மக்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பல்லாக்கில் பூக்களை கொண்டு வந்து அம்மனுக்கு சாற்றி சிறப்பு வழிபாடு செய்தனர். பூச்சொரிதல் விழாவை யொட்டி கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தர்கள், கிராம மக்கள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.