Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆரணிப்பட்டியில் பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா

பொன்னமராவதி, மே 15: பொன்னமராவதி அருகே உள்ள ஆரணிப்பட்டி மாயம் பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. சிவகங்கை மாவட்டம் ஆரணிப்பட்டி மாயம் பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மங்கள இசை, அனுக்ஞை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, விக்னேஸ்வர பூஜையுடன் முதல்யாகசாலை பூஜை, துவங்கியது.

இரண்டாம்காலயாக பூஜைகள் நடைபெற்று கோ பூஜை, நாடிசந்தானம் 108ஹோம மூலமந்திர ஹோமம், பூர்ணாகுதி நடைபெற்று கோயில் கும்பாபிஷேகம் சிவாச்சாரியார்கள் சிவாச்சாரியார்கள் பாலாஜி, சுவாமிநாதன் ஆகியோர் கும்பத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷகம் நடந்தது. இதில் மதியம் அன்னதானம் நடந்தது. இதில் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை ஆரணிப்பட்டி மாயம் பெருமாள் கோயில் பங்காளிகள் செய்திருந்தனர்.