Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

புதுகை அருகே மாணவர் கொலையில் திடீர் திருப்பம்: பாலியல் தொல்லை கொடுத்து கொன்றது அம்பலம்

புதுக்கோட்டை, ஜூன் 29: புதுக்கோட்டை அருகே 9 வயது சிறுவன் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக, பாலியல் தொல்லை கொடுத்து கொலை செய்ததாக 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள கருக்காக்குறிச்சி கீழத்தெரு கிராமத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். 9 வயதான மகன் திருமேனி(எ) கருப்பன்ஜி அரசு தொடக்கப் பள்ளியில் 4ம் வகுப்புப் படித்து வந்தார். இந்நிலையில், வழக்கம் போல நேற்று முன்தினம் மாலை விளையாடச் சென்ற சிறுவன் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர் மற்றும் உறவினர் சிறுவனை தேட தொடங்கினர்.

அரை மணி நேரம் தேடிய பிறகு சிறுவன் வீட்டிலிருந்து 100 மீட்டர் தள்ளி இருக்கக்கூடிய தண்ணீர் இல்லாத குளத்தின் கரையில் கழுத்து மற்றும் முகத்தில் காயத்தோடு சடலமாக கிடந்தார். இது அப்பகுதியில் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த வடகாடு போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். இதில் மூன்று பேரை பிடித்து சந்தேகத்தில் பேரில் விசாரணை மேற்கொண்டனர். அதில் 9 வயது சிறுவனை பாலியல் தொந்தரவு செய்து கொன்றதாக 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. எனவே அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.