Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருமயம் அருகே புளிய மரத்தில் டூவீலர் மோதி கல்லூரி மாணவர் 2 பேர் சாவு

புதுக்கோட்டை, ஜூலை 6: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே புளிய மரத்தில் டூவீலர் மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வல்லத்திராகோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஜாப்ரலி மகன் பீர்முகமது (19), சேக் முகமது மகன் ராஜா முகமது (19). இருவரும் நண்பர்கள் பாலிடெக்னிக் படித்து வருகின்றனர். இந்நிலையில் இரண்டு பேரும் நேற்று மாலை பொன்னமராவதி- புதுக்கோட்டை சாலையில் பனையப்பட்டி வழியாக புதுக்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த டூவீலர் பூலாம்பட்டி அருகே சாலையோரம் இருந்த புளிய மரத்தில் மோதியது.

இதில் இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் பனையப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் ஆம்புலன்ஸ் வந்து விபத்தில் காயம் அடைந்த இளைஞர்களை பரிசோதனை செய்ததில் இருவரும் உயிரிழந்தது தெரிய வந்தது. தொடர்ந்து உயிரிழந்த இளைஞர் உடலை பனையப்பட்டி போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.