Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கந்தர்வகோட்டை அருகே தமிழ்நாடு அறிவியல் இயக்க அறிவியல் கண்டுபிடிப்பு கருத்தரங்கம்

கந்தர்வகோட்டை, ஜன.1: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் அறிவியல் கண்டுபிடிப்பு குறித்து கருத்துரங்கம் நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கந்தர்வகோட்டை ஒன்றிய செயலாளர் ரகமத்துல்லா தலைமை வகித்தார். துணைச் செயலாளர் பிரேமா வரவேற்றார்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் முத்துக்குமார் அறிவியல் கண்டுபிடிப்புகள் குறித்து பேசுகையில்,

ஐசக் நியூட்டன் ஆப்பிள் கதை என்பது, அவர் ஈர்ப்பு விசை கோட்பாட்டை கண்டுபிடித்ததற்கு உத்வேகமாக, மரத்திலிருந்து ஆப்பிள் விழுவதைப் பார்த்ததாகச் சொல்லப்படும் புகழ்பெற்ற நிகழ்வு ஆகும். ஆப்பிள் தலையில் விழுந்ததா அல்லது கீழே விழுவதைக் கவனித்தாரா என்பது விவாதம் என்றாலும், அதுவே புவி ஈர்ப்பு விசையை அவர் சிந்திக்கத் தூண்டியது, பூமியில் உள்ள விசையும் வானில் உள்ள விசையும் ஒன்றுதான் என அவர் உணர்ந்தார்,

இதுவே அவரது ஈர்ப்பு விசை கோட்பாட்டிற்கு அடித்தளம் அமைத்தது. ஒருமுறை நியூட்டன் தனது வீட்டில் உள்ள ஆப்பிள் மரத்தடியில் அமர்ந்திருந்தபோது, ஒரு ஆப்பிள் பழம் கீழே விழுவதைக் கண்டார். ஏன் ஆப்பிள் நேராகக் கீழே விழுகிறது, பக்கவாட்டிலோ அல்லது மேலேயோ பறக்கவில்லையே? என்று அவர் யோசித்தார். இந்தக் கேள்விதான், பூமியை நம்மைப் பிடித்து வைத்திருக்கும் அதே விசையால் தான் சந்திரனும் பூமியைச் சுற்றி வருகிறது என்பதை அவர் சிந்திக்கத் தூண்டியது. ஆப்பிள் தலையில் விழுந்தது என்பது ஒரு கட்டுக்கதை என்று சிலர் கூறினாலும், ஆப்பிள் கீழே விழுவதைக் கவனித்தது உண்மைதான் என்று கருதப்படுகிறது.

இந்த சம்பவம் 1665 அல்லது 1666 ம் ஆண்டுகளில் நடந்தது. நியூட்டன் தனது ஈர்ப்பு விசை கோட்பாட்டை தனது பிரின்சிபியா என்ற புத்தகத்தில் 1687-ல் வெளியிட்டார். மேலும் நியூட்டனின் இயக்க விதிகள் குறித்தும், ஐன்ஸ்டீன், தாமஸ் ஆல்வா எடிசன், லூயி பாஸ்டர், கிரிகோர் மெண்டல் உள்ளிட்டோரியின் கண்டுபிடிப்புகள் குறித்து பேசினார். இதில் அறிவியல் இயக்க கிளை நிர்வாகிகள் ரேவதி, நித்தியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக கிளை பொருளாளர் நந்தினி நன்றி கூறினார்.