தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மூல வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு பொதுமக்களுக்கு பொதுப்பணித்துறை எச்சரிக்கை

 

Advertisement

வருசநாடு, நவ. 23: கண்டமனூர் மூலவைகை ஆற்றில் தடுப்பணையை மூழ்கடித்து வெள்ளப்பெருக்கு செல்வதால் பொதுமக்கள் அந்தப் பகுதிக்கு செல்லவோ, தடுப்பணையில் குளிக்கவோ வேண்டாம் என பொதுப்பணித் துறையினர் எச்சரித்துள்ளனர். தேனி மாவட்டம், வருசநாடு அருகே உள்ள ஓயம்பாறை, வாலிப்பாறை போன்ற வனப்பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் கண்டமனூர் வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதனால் தற்போது ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தடுப்பணையை மூழ்கடித்து தண்ணீர் பாய்ந்து செல்கிறது. ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் தடுப்பணை பகுதிக்கு பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம். தடுப்பணையில் இறங்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ வேண்டாம் என பொதுமக்களுக்கு பொதுப்பணித்துறை எச்சரித்துள்ளது. மூலவைகை ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்வதால் வைகை அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Related News