தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம்

 

Advertisement

திருப்பூர், டிச.9: நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை வருகின்ற 25ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதனை தொடர்ந்து ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. பண்டிகைகளுக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் திருப்பூரில் தங்கி உள்ள வெளி மாவட்ட மற்றும் மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமானோர் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க விடுமுறை நாளான நேற்று கடை வீதிகளில் திரண்டிருந்தனர். திருப்பூர் காமராஜ் சாலை,புது மார்க்கெட் வீதி,காதர் பேட்டை,மாநகராட்சி சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் ஏராளமான பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் சென்றனர்.

குறிப்பாக கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தங்களுக்கு தேவையான புத்தாடை, கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தேவையான கிறிஸ்துமஸ் மரம் ,ஸ்டார்,வண்ண நிற பலூன்கள் உள்ளிட்டவை ஏராளமானோர் வாங்கிச் சென்றனர். விடுமுறை நாளான நேற்று திருப்பூர் மாநகரின் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமான பின்னலாடை நிறுவனங்கள் தங்கள் விடுதிகளில் தங்கி உள்ள வடமாநில தொழிலாளர்களை பேருந்துகளில் அழைத்து வந்திருந்தனர். மாநகராட்சி சந்திப்பு அருகே அவர்களை இறக்கி விட்ட நிலையில், நாள் முழுவதும் தொழிலாளர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி மாலை மீண்டும் விடுதிக்கு சொந்தமான பேருந்துகளிலேயே சென்றனர். இதன் காரணமாக புது மார்க்கெட் வீதி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் நேற்று வழக்கத்தைவிட பொதுமக்களின் கூட்டம் அதிகளவு காணப்பட்டது.

Advertisement

Related News