தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஏரி மீன்களை ஏலம் விட எதிர்ப்பு மேல்மாவிலங்கை ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதம்- பரபரப்பு

திண்டிவனம், அக். 24: கல்பாக்கம் ஏரி மீன்களை ஏலம் விட எதிர்ப்பு தெரிவித்து மேல்மாவிலங்கை ஊராட்சி மன்ற அலுவலகத்ைத பொதுமக்கள் முற்றுகையிட்டனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மேல்மாவிலங்கை ஊராட்சிக்கு உட்பட்ட மேல்மாவிலங்கை, கல்பாக்கம் கிராமம். மேல்மாவிலங்கை ஊராட்சி மன்ற தலைவர் செங்கேணி கல்பாக்கத்தில் உள்ள ஏரியில் உள்ள மரங்கள் மற்றும் மீன்களை ஏலம் விடப்போவதாக நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டர். இதனையறிந்த பொதுமக்கள் ஊராட்சி தலைவரின் அறிவிப்பு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஒலக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு அளித்தனர். எந்த நடவடிக்கையும் எடுக்காததால் நேற்று அறிவித்தபடி ஏலம் நடந்தது.

Advertisement

ஆத்திரமடைந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஏலம் விடுவதை தடுத்து நிறுத்தி ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்த வெள்ளிமேடுப்பேட்டை போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படாத நிலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். பின்னர் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நூர்ஜகான், வி.ஏ.ஓ. மதி உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சு நடத்தினர். அப்போது புதிதாக அமைக்கப்பட்ட தார் சாலை பணிக்காக அனுமதி இன்றி மரங்கள் வெட்டி அகற்றப்பட்டதை கண்டித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததால் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

Advertisement