தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தனியார் மருத்துவமனை மருத்துவர்களுக்கு மகப்பேறு, குழந்தை நலம் குறித்த பயிற்சி பட்டறை: கலெக்டர் தொடங்கி வைத்தார்

Advertisement

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர்களுக்கு மகப்பேறு மற்றும் குழந்தை நலம் குறித்த பயிற்சி பட்டறையை கலெக்டர் தொடங்கி வைத்தார். திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி கூட்ட அரங்கில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனை மருத்துவர்களுக்கு மகப்பேறு மற்றும் தாய் சேய் நலம் குறித்த பயிற்சி பட்டறையை கலெக்டர் த.பிரபு சங்கர் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், மாவட்டத்தில் அனைத்து சிக்கல் உள்ள கர்ப்பிணிகள் பரிசோதனை செய்து கொள்ள தனியார் மருத்துவர்களை அணுகும்போது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

சுகாதாரத்துறை சார்பில் 24 மணி நேர தாய் சேய் நல கண்காணிப்பு மையம் அரசு மருத்துவமனையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதற்காக 9384814050, 9384814049, 9384814048, 9384814047, 9384814046 ஆகிய அலைபேசி எண்ணை தொடர்பு கொள்வதன் மூலம் அவர்களுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்க முடியும். இதன் முலம் திருவள்ளூர் மாவட்டத்தில் மகப்பேறு இறப்பு விகித்தினை படிப்படியாக குறைக்க முடியும். தனியார் மருத்துவர்களை அணுகும்போது அதிக ஆபத்துள்ள கர்ப்பிணிகள் மற்றும் கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தினால் மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைக்க முடியும் என்றார்.

பின்னர், மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பல் சம்பந்தமான நோய்களுக்கு சிகிச்சை அளித்து சிறப்பாக பணியாற்றிய அரசு மற்றும் தனியார் பல் மருத்துவர்களுக்கு நற்சான்றிதழ் மற்றும் கேடயத்தை கலெக்டர் வழங்கினார். இதனைத் தொடர்ந்து கர்ப்ப காலங்களில் செயல்படுத்த வேண்டிய நடைமுறைகள் தொடர்பான ‘‘100 மகப்பேறு இழப்புகள் 100 பாடங்கள்’’ என்ற புத்தகத்தினை கலெக்டர் வெளியிட, மருத்துவ அலுவலர்கள் பெற்றுகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட சுகாதார அலுவலர்கள் திருவள்ளூர் பிரியாராஜ், பூந்தமல்லி பிரபாகரன், மருத்துவக் கல்லூரி முதல்வர் ரேவதி, ஆவடி மாநகராட்சி நகர்நல அலுவலர் ராஜேந்திரன், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இணை இயக்குனர் நிர்மல்சன், சுகாதாரத் துறை இணை இயக்குனர் அம்பிகா சண்முகம், குடும்ப நல துணை இயக்குனர் சேகர், திருவள்ளூர் ஜனனி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் ஜி.புவனேஷ்வரி கோபால கிருஷ்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement

Related News