தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தஞ்சாவூரில் தபால் துறை கண்காட்சி அக். 8, 9 தேதிகளில் நடக்கிறது

 

Advertisement

தஞ்சாவூர், ஆக.22: இந்திய அஞ்சல் துறை சார்பில் தஞ்சாவூர் அஞ்சல் கோட்டத்தில் மாவட்ட அளவிலான தபால் துறை கண்காட்சி வரும் அக்டோபர் மாதம் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் நடக்க உள்ளதாக தஞ்சை கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் தங்கமணி தெரிவித்துள்ளார்.இந்திய தபால் துறை மற்றும் சோழமண்டல வரலாற்றுத் தேடல் குழு இணைந்து மாநகராட்சி மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு சிவகங்கை பூங்காவில் இருந்து தஞ்சை பெரிய கோயில் வரை மரபு நடை நிகழ்ச்சி (20.08.2024) நடந்தது. களஞ்சியம்79\”இ. தபால் துறை கண்காட்சியின் சின்னமான ‘டுகாங்’ எனும் கடல் பசுவின் சின்னம் அனைவருடைய பார்வைக்கும் வைக்கப்பட்டிருந்தது.

தஞ்சை பெருவுடையார் கோயிலின் சிறப்புகளையும் முக்கியமான கல்வெட்டுகளையும் சோழமண்டல வரலாற்றுத் தேடல் குழு தலைவர் டாக்டர் உதயசங்கர் பள்ளி மாணவர்களுக்கு தெளிவாக விளக்கினார். இறுதியில் பள்ளி மாணவர்களுக்கு தஞ்சை பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழாவில் தபால் தலை வெளியிட்டது மற்றும் தபால் தலை சேகரிப்பு பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. மாவட்ட அளவிலான தபால் துறை கண்காட்சி களஞ்சியம் 79° இ சின்னம் பொறித்த தொப்பிகள் மாணவர்களுக்கு பரிசாக வழங்கப்பட்டது. மாணவர்கள் அனைவரும் அக்டோபர் மாதம் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் நடக்கவிருக்கும் களஞ்சியம் தபால்தலை கண்காட்சியைக் காண மிகவும் ஆர்வத்துடன் உள்ளதாக தெரிவித்தார்.

Advertisement